GovPay ஊடாக அபராதம் செலுத்தும் இன்று முதல் வசதி

  மேல் மாகாணத்தில் இன்று (28) முதல் GovPay வழியாக நேரடியாக அபராதம் செலுத்தும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.


 


இது தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

agpwin News


இந்த முறையை சீராக செயற்படுத்துவதை உறுதி செய்வதற்காக தொடர்புடைய அதிகாரிகளுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் ஆயிரம் பேருக்கு கையடக்க தொலைபேசிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 




இந்த முறையை விரைவாக அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த டிஜிட்டல் விவகார அமைச்சின் வலுவான அர்ப்பணிப்பையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.