அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் ஜனாதிபதியின் மகிழ்ச்சி அறிவிப்பு-Tamil News

 

agpwin News

 அரச ஊழியர்களுக்கான நிலுவை சம்பள உயர்வை 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


யாழ். மாவட்ட செயலகத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் பிராந்திய அலுவலகத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றிய போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.



அடிப்படை சம்பளத்தின் ஆரம்ப உயர்வு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.



நாட்டை அபிவிருத்தி செய்ய எங்களுக்கு ஒரு வலுவான அரச துறை தேவை. ஒவ்வொரு வளர்ந்த நாட்டிற்கும் ஒரு வலுவான அரச துறை உள்ளது எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.