வவுனியாவில் கர்ப்பிணி மனைவியின் வெட்டிய தலையுடன் யாழ் கணவன் பொலிஸில் சரண்

   

agpwin Tamil News

 வவுனியா புளியங்குளத்தில் 32 வயது கர்ப்பிணி  மனைவியில் தலையை    கணவன் வெட்டி வீசிய சம்பவம் பெரும்   அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வவுனியாவில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.


 புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தரே சரணடைந்துள்ளார்.



 சம்பவத்தில்  அரச பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும்  ஆசிரியையே  (32)  கொல்லப்பட்டுள்ளார்.



 இன்று காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தனது மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு வந்த கணவன் மனைவியை கொலைசெய்து நயினாமடு காட்டுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.



 கணவன்- மனைவிக்கிடையில் குடும்பத்தகராறு நிலவி வந்துள்ளது. இந்த விவகாரத்தை பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக்கொள்ளலாம் என கூறி மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.



 நயினாமடு காட்டுப்பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர் கழுத்தை வெட்டி பிளாஸ்டிக் பையில் வைத்து மோட்டார் சைக்கிள் டிக்கிக்குள் வைத்து புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.



 தனது மனைவியை கொன்று நயினாமடு காட்டில் வீசியுள்ளதாக அவர் தெரிவித்ததையடுத்து பொலிசார் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் கர்ப்பிணி மனைவி கணவனால் கொடூரமாக  கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.