மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடா? யாழில் முண்டியடித்த மக்கள்!!

    

agpwin News

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் பெருமளவிலான மக்கள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வரிசையில் காத்திருந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது



குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்



 ஈரான் - இஸ்ரேல்  இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு  ஏற்படலாம் என சமூகவலைத்தளங்களில் செய்தி பரவிவந்துதது



இதனையடுத்து  இன்று மதியம் முதல் யாழ்ப்பாணத்தில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள ஏராளமான மக்கள் காத்துநிற்கின்றனர். 



அத்துடன்  சில எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் முடிவடைந்து விட்டதாக அறிவித்தல் பலகைகள்   காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.