ஆற்றில் தவறி வீழ்ந்த சிறுவன் சடலமாக மீட்பு

agpwin News


  காத்தான்குடியில் ஆற்றில் தவறி விழுந்த சிறுவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 


காத்தான்குடி-05, ஊர் வீதியைச் சேர்ந்த குறித்த சிறுவன் காலை வேளையில் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.


ஆற்றங்கரை பகுதியை நோக்கி தனியாக நடந்து சென்றுள்ள நிலையில், அங்கு றின்றபோது தவறிய சிறுவன் நீரில் வீழ்ந்துள்ளார்..


 இதற்கிடையில் சிறுவனை காணவில்லை என பெற்றோர்கள் பொது மக்களுடன் இணைந்து தேடி வந்துள்ளனர்.


இதன்போது காத்தான்குடி ஆற்றங்கரை அண்மித்த பகுதியில் காணப்பட்ட சிசிடிவி கமெராவில் சிறுவன் தனியாக நடந்து வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன.