ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

 

Tamil lk News

 ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


ஜப்பானின் வடக்கே ஹொக்கைடோ கடற்கரையில் 6.1 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 20 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



உள்ளூர் நேரப்படி இன்றையதினம் மாலை 5:37 மணிக்கு குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.


நிலநடுக்கத்தின் மையம் ஹொக்கைடோவின் கிழக்கு கடற்கரையில் இருந்ததாகவும், நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.



நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நில அதிர்வு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. குஷிரோ, ஷிபெச்சா, ஹொன்ஷு ஆகிய நகரங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.



நிலநடுக்கம் பல பகுதிகளில் வலுவான அதிர்வுகளை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படும் அதேவேளை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் இதுவரை எதுவித தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.