அதிவேகமாக பறந்த பேருந்து: துண்டுதுண்டான மதில்- பலர் காயம்!

 

அதிவேகமாக பறந்த பேருந்து: துண்டுதுண்டான மதில்- பலர் காயம்!

 சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர்.


குறித்த விபத்து காக்காப்பள்ளி பிரதேசத்தில் இன்று(11) காலை இடம்பெற்றுள்ளது.


அதிவேகம் காரணமாக குறித்த பேருந்து வீதியோரமாக இருந்த  மதில், கட்டிடம் என்பவற்றுடன் மோதுண்டு அதேவேளை அங்கிருந்த மரத்துடனும் மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றது.


இதன்போது,பேருந்தில் பயணம் செய்த பலர் காயம் அடைந்துள்ள நிலையில் அவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.